கோவையைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் பத்திர பதிவுத்துறையில் சேலம் மாவட்டத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 34 லட்சத்து 58 ஆயிரத்து 342 மதிப்புக்கு சொத்து சேர்த்து இருப்பதாக கோபாலகிருஷ்ணன் மீதும், அவரது மனைவி தீனா மீதும் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2008 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை லஞ்ச ஒழிப்பு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் முன்னாள் அதிகாரி கோபாலகிருஷ்ணன் கடந்த 20 21 ஆம் ஆண்டு இறந்து விட்டார். அவரது மனைவி தீனா மீதான வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கைவிசாரித்த நீதிபதி மோகன ரம்யா குற்றம் சாட்டப்பட்ட தீனாவுக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும் , ரூ 10 ஆயிரம் அபராதமும், விதித்து தீர்ப்பு கூறினார்..

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0