கோவை சிறையில் ஆயுள் தண்டனை கைதி மர்ம சாவு.

கோவை; நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஏசுதாஸ் ( வயது 33) இவர் திருப்பூரில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். அவருக்கு கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது .இதனால் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்குள்ள தொழில் கூடத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஏசுதாஸ் கழிவறைக்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பவில்லை. இதனால் சிறைத்துறை அதிகாரிகள் சென்று பார்த்தபோது கழிவறையில் கழுத்து எலும்பு முறிந்த நிலையில் ஏசுதாஸ் மயங்கி கிடந்தார் .உடனே சிறை துறை அதிகாரிகள் ஏசுதாசை மீட்டு ஆம்பு லன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோ தித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் சிறைக்குச் சென்று நேரில் விசாரணை நடத்தினார்கள்.ஏசுதாஸ் எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை .அவர் தற்கொலை செய்து கொண்டாரா ?அல்லது உயரமான இடத்தில் குதித்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள் .இது தொடர்பாக மர்ம சாவு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.