கோவை அருகே உள்ள சூலூருக்கு கஞ்சா கடத்திவருவதாகசூலூர் போலீசுக்கு நேற்று ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் நீலாம்பூர் பகுதியில் நேற்று மாலை திடீர் சோதனை நடத்தினார்கள் அப்போது வெளி மாவட்டத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததாக தேனி மாவட்டத்தை சேர்ந்த மாயன் மகன் பிரபாகரன் ( வயது 40) ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த காசிநாதன் மகன் பாஸ்கரன் ( வயது 39) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிட மிருந்து 9கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.விசாரணையில் இவர்கள் வெளி மாவட்டத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து கோவை மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது .2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கஞ்சா கடத்தல் பேர்வழிகளை கைது செய்த சூலூர் போலீசாரை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் பாராட்டினார்..

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0