கோவை; கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் இவரது மகள் தன்யா ( வயது 20) இவர் கோவை சுங்கம், பாரதி நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி நர்சாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மருத்துவமனையில் 3 -வது மாடிக்குச் சென்ற தன்யா மாடியில் இருந்து கீழே குதித்தார். தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைகோவை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிரசிகிச்சைஅளித்தும் பலன் அளிக்காமல் இன்று காலையில் இறந்தார். தற்கொலைக்கான காரணம் குறித்து இராமநாதபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் விசாரணை நடத்தி வருகிறார்.இவர் காதல் தகராறில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது..

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0