வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம். பெண்கள் உட்பட 3 பேர் கைது.

கோவை சாய்பாபா காலனி, அழகண்ணன் வீதியில் உள்ள ஒரு வீட்டில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக சாய்பாபா காலனி போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ் பெக்டர் சரவணன் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போதுவாடகைக்கு வீடு எடுத்து அழகிகளை வைத்துவிபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர் பாக நீலகிரி மாவட்டம்,கூடலூர், அதிபள்ளியைச் சேர்ந்த தயானந்தன் ( வயது 32) திருப்பூர் ராக்கிபாளையம் பிரிவு, ராம்நகரை சேர்ந்த கிருஷ்ணவேணி ( வயது 31) குனியமுத்தூர் குறிஞ்சி நகர் , ரசீனா பேகம் (வயது 31) ஆகியோர் கைது செய்யப்பட்டனர் .பூ மார்க்கெட் இப்ராஹிம் என்பவர் தலைமறைவாகி விட்டார்.இவரை தேடி வருகிறார்கள்.