கோவை ராமநாதபுரம், மருதூர், நஞ்சப்பன் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் ( வயது 59)ஆர் .எஸ் . புரம் சடையப்பத் தேவர் வீதியைச் சேர்ந்தவர்விக்டர் ( வயது 60) இவர்கள் இருவரும் பெயிண்டிங் தொழில் செய்து வந்தனர். இந்த நிலையில் 2 பேரும் நேற்று மதியம் 11:30 மணிக்கு மோட்டார் சைக்கிளில் நஞ்சுண்டாபுரத்தில் இருந்து சுங்கம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். ராமநாதபுரம் சிக்னலில் இடதுபுறம் திரும்பியபோது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வேகமாகவந்த ஒருலாரி இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு லாரியின் பின் சக்கரத்தில் சிக்கிக் கொண்டனர். அது தெரியாமல் டிரைவர் லாரியை இயக்கியதால் 2 பேரும் லாரியின் பின் சக்கரம் அவர்கள் மீது ஏறி இறங்கியது. இதை பார்த்ததும் அக்கம்பக்கத்தினர் சத்தம் போட்டனர். அந்த பகுதியில் நின்றுகொண்டிருந்தவர்கள் ஓடி வந்து விபத்தில் சிக்கியவர் களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் செல்வ ராஜ், விக்டர் ஆகியோர் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில்அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர்..இது குறித்த தகவல் அறிந்ததும் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து சென்று பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் அமுதா வழக்கு பதிவு செய்து போகம் பட்டியைச் சேர்ந்தலாரி டிரைவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 24) என்பவரை கைது செய்தார்.மேலும் விசாரணை நடந்து வருகிறது.
