கோவை; சிவகாசியை சேர்ந்தவர் பழனிச்சாமி ( வயது 39) இவரது மனைவி வத்சலா (வயது 35) இவர்கள் இருவரும் கோவை வேடப்பட்டி, வி. கே. வி .நகரில் வசித்து வந்தனர். இவர்களது 7 வயது மகன் கடந்த ஏப்ரல் மாதம் வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டான். இதனால் மன அழுத்தத்துடன் இருவரும் காணப்பட்டனர்.இந்த நிலையில்வாழ்க்கையில் வெறுப்படைந்து காந்திபுரம் நேரு வீதியில் உள்ள ஒரு லாட்ஜில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து காட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0