கோவை காட்டூர் மாரியப்பன் விதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி லட்சுமி (வயது 86) இவர் அத்திப்பாளையம் பிரிவில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்தார், நேற்று அவரது வீட்டில்யாரும் இல்லாத நேரம் கார் பார்க்கிங் அருகே வைத்து தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் முழுவதும் கருகியது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து அவரது மகன் மோகன்ராஜ் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0