2 பைக்குகள் நேருக்கு நேர் மோதல் – காவலாளி பலி..

கோவை ஒண்டிப்புதூர் இருகூர் ரோட்டை சேர்ந்தவர் குமரன். இவரது மகன் பழனிசாமி ( வயது 43) காவலாளியாக வேலை பார்த்து வந்தார் .இவர் நேற்று நீலாம்பூர்- சூலூர் பிரிவு சர்வீஸ் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த புல்லட் பைக் இவரது பைக் மீது மோதியது. இதில் பழனிச்சாமியும் மற்றொரு பைக்கில் பின்னால் இருந்து வந்த திருமூர்த்தியும் படுகாயம் அடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் பழனிச்சாமி இறந்துவிட்டார். திருமூர்த்தி படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார் . இது குறித்து அவரது மனைவி கற்பகம் சூலூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மாதையன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார் . இது தொடர்பாக புல்லட் பைக் ஓட்டி வந்த கனகராஜ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.