கோவை சிங்காநல்லூர், ஆரியன் காடு ரோடு பட்டத்தரசி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தமிழரசு. இவரது மனைவி பானுமதி (வயது 65) இவர் நேற்று காலையில் அங்குள்ள ரோட்டில் நடை பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 ஆசாமிகள் அவரது கழுத்தில் கடந்த 4பவுன் தங்கசெயினை பறித்து விட்டு தப்பிச் சென்று விட்டனர் .இது குறித்து பானுமதி சிங்கநல்லூர் போலீசில்புகார் செய்தார்..சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்கு பதிவு செய்துமர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0