கோவை மாநகர பகுதியில் விபத்துக்கள் நடப்பதை தடுக்க போலீஸ் கமிஷன் பால கிருஷ்ணன் உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீசார் தீவிர நடவடிக்கை மேற் கொண்டு வருகின்றனர். இதற்காக போக்குவரத்து போலீசார் தினமும் ஆங்காங்கே வாகன தணிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அப்போது போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக விபத்துக்கள் அதிகமாக நடக்கும் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டு அங்கு விபத்துக்கள் நடப்பதை தடுக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் .இதன் காரணமாக கோவை மாநகர பகுதியில் விபத்துக்கள் குறைந்துள்ளது கடந்த ஆண்டு விட இந்த ஆண்டில் விபத்தில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கையும் குறைந்து இருக்கிறது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் குறித்து போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- கோவை மாநகர பகுதியில் வாகன சோதனை நடத்தி இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வருபவர்கள், சிக்னல் விலை மதிக்காமல் செல்பவர்கள், செல்போன் பேசியபடி வாகனத் தை ஓட்டுபவர்கள், குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டு பவர்கள் உட்பட விதிகளை மீறுபவர் களுக்கு அபராத விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 2,லட்சத்து 5 ஆயிரத்து ,967 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாநகர பகுதியில் எந்தெந்த இடங்களில் அதிக விபத்து நடக்கும் பகுதி என்று கண்டறியப் பட்டு அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் காரணமாக விபத்து களும் குறைந்துள்ளது கடந்த ஆண்டு 2023 ஆம் ஆண்டில் நடந்த விபத்துகளில் 298 பேர் உயிரிழந்தனர். 862 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்துக்கள் நடப்பதை தடுக்க எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று வரை கோவை மாநகர பகுதியில் நடந்த விபத்துகளில் 286 பேர் பலியாகி உள்ளனர். 883 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0