கோவை; சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் லோகேஷ் ( வயது 17) இவர் கோவை சரவணம்பட்டி தந்தை பெரியார் நகரில் உள்ள தனது அண்ணன் வீட்டில் தங்கியிருந்து பந்தல் போடும் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் லோகேசின் நண்பருக்கு பிறந்தநாள். இந்த விழாவிற்கு செல்வதற்காக தனது அண்ணனிடம் மோட்டார் சைக்கிள் கேட்டுள்ளார். ஆனால் அவர் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் லோகேஷ் தனது அண்ணன் தூங்கியவுடன் இரவில் மோட்டார் சைக்கிள் எடுத்துக்கொண்டு தனது நண்பரான சரவணம்பட்டி பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த பிரசன்ன ( வயது 17 )என்பவரை அழைத்துக் கொண்டு நண்பரின் பிறந்தநாள் விழாவுக்கு சென்றார். இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் விளாங் குறிச்சி ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்தலோகேஷ் பிரசன்னா ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்கள் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் இறந்தார்கள். இது குறித்து கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0