கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி பீளமேடு ,மீனா எஸ்டேட் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் அருகே நேற்று இரவு ரோந்துசுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர் களிடம் 200 கிராம் கஞ்சா, 40 போதை மாத்திரைகள் 25, கவர்இருந்தது கண்டுபிடிக் கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் ஆவராம்பாளையம் ஜெகநாதபுரம் துரைசாமி மகன் சிவசூரியன் ( வயது 23) புலியகுளம்,மருதாச்சலம் வீதியை சேர்ந்த விஜயகுமார் மகன் வெங்கடேஷ் குமார் ( வயது 24) என்பது தெரிய வந்தது. இவர்கள் கஞ்சா – போதை மாத்திரைகளை அந்த பகுதியில் உள்ள மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0