கோவை விமான நிலையத்தில் இருந்து ஒரே நாளில் 11,172 பேர் பயணம்

கோவை; பொங்கல் பண்டிகை வருகிற 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதை கொண்டாட பலரும் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்கிறார்கள். இதனால் பஸ் – ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதுபோல விமானத்தில் பயணம் செய்பவர்களில் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதன்படி கோவை விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் 66 விமானங்களில் 11,172 பேர் பயணம் செய்தனர் .இதன் காரணமாக விமான நிலையத்தின் உட்பகுதியில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வழக்கமாகஒரே நாளில் 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பயணிகள் வரை பயணம் செய்வார்கள். ஆனால் முதன் முறையாக ஒரே நாளில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து புதிய சாதனை ஏற்படுத்தி உள்ளார்கள். கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 3 லட்சத்துக்கு மேற்பட்ட பயணிகள் விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.